
சீனாவில் உள்ள நகரங்களில் ஆண்களுக்கு அதிக அளவில் பொது கழிவறைகள் உள்ளன. பெண்களுக்கு மிக குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் கழிவறைக்கு செல்ல பெண்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவலம் உள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று ஆண்களின் கழிவறையை கைப்பற்றும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். அவர்கள் ஆண்கள் கழிப்பறையை கைப்பற்றி முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். கையில் 'பேனர்'களை தாங்கி இருந்தனர். அதில் 'ஆண்கள் நேசிப்பதாக இருந்தால் கழிவறைக்கு செல்ல எங்களை காக்க வைக்காதீர்கள்' என எழு தப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பு குவான்ஷு நகரில் இப்போராட்டம் நடந்தது. இதை தொடர்ந்து அங்கு ஆண்களைப் போன்று பெண்களுக்கும் கூடுதலாக கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment